
25.5.2000ம் ஆண்டு ஓயாத அலைகள் 3 நடவடிக்கையின் போது மண்டைதீவில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் சதாவின் நினைவு நாளை முன்னிட்டு , அக்கனிப் பறவைகள் அமைப்பின் வெளியீட்டுத் தளமான புரட்சி சவுண்டினூடாக (Puradsi Sound) இப்பாடல் வெளியிடப்படுகிறது.
கலைமகளின் வரிகளுக்கு இசைப்பிரியன் இசைவழங்க, வைஷ்ணவி பாடியுள்ள இப்பாடலைக் கரும்புலி மேஜர் சதாவுக்குச் சமர்ப்பணம் செய்வதையிட்டு அக்கினிப் பறவையினராகிய நாங்கள் பெருமை கொள்கிறோம். அத்தோடு மேஜர் சதாவின் குடும்பத்தினரையும்
பெருமையுடன் மனங்கொள்கிறோம். கடந்த ஆண்டின் மாவீரர் நாளை முன்னிட்டு புரட்சி சவுண்டினூடாக „எழுவோம்“ எனும் ஒலிப்பேழையினை வெளியிட்டிருந்தோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Schreib einen Kommentar