
வரப்போகும் புதிய அரசியல் யாப்பை தமிழர்களை ஏற்க வைக்க வேண்டும் என்பதற்காக, தற்போதய இலங்கை அரசுக்கு பல தமிழ் ஊடகங்கள் விளம்பரகளைச் செய்து வருகின்றன. இதற்கான ஓர் எடுத்துக்காட்டை நாங்கள் கீழே இணைத்துள்ளோம். „20’000 பேருக்கு வேலைவாய்ப்பு இது இலங்கையருக்கு மகிழ்ச்சியான செய்தி“ஒரு பிரபலமான தமிழ் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பினை பற்றிப் பார்த்தோமானால் இதனை ஏற்படுத்தும் „Volkswagen“ நிறுவனத்தின் வாகனத் தொழிற்சாலை Kuliyapitiya எனும் இடத்தில் நிறுவப்படுகிறது. இது கொழும்புக்கு அருகாமையில் உள்ளது என்பதனை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
அத்தோடு கிட்டததட்ட ஆறு மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் வேலையில்லாப்பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர் என்பதனை நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.
ஆகவே தமிழர்கள் இந்த வேலைவாய்ப்பினால் நலமடைகிறார்களோ என்ற கேள்வி எழுகிறது.
http://www.tamilwin.com/statements/01/130448
http://www.dailynews.lk/2017/01/04/local/103782
http://newsfirst.lk/…/sri-lanka-begins-work-volkswagen-ass…/
http://athavansrilanka.com/?p=350512
Schreib einen Kommentar